இயற்கை முறையிலான அழகுக் குறிப்புகள்
இயற்கை முறையிலேயே நம்மை அழகாக வைத்துக் கொள்ள ஆயிரம் வழிகள் இருக்கும்போது நமக்கு என்ன கவலை... அவற்றில் இதோ உங்களுக்கான சில.
- முக அழகை முட்டையின் மஞ்சள் கருவுடன் தேனை கலந்து முகத்தில் தடவ வேண்டும்.
- மீதமிருக்கும் வெள்ளையை என்ன செய்வது என்று யோசிக்காதீர்கன். அதனை தலையில் தேய்த்துக் குளித்துப் பாருங்கள். சிறந்த கண்டீஷனராக இருக்கும்.
- வீட்டிலிருக்கும் போது பால் ஏடுகளை முகத்தில் தேய்த்து வரவும்.
- பன்னீரில் நனைத்த பஞ்சுத் துண்டை பத்து நிமிடங்களுக்கு கண்களைச் சுற்றி வைக்கவும். கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறையும்.
- வெந்தயத்தை விழுதாக அரைத்து தலையில் தடவி ஊறவிட்டு பின்னர் எலுமிச்சை சாறு கலந்த நீரில் குளிக்கவும். இது குளிர்ச்சியை ஏற்படுத்தும். எனவே பார்த்து செய்யவும்.
- தேங்காய் எண்ணையை தடவி சீகைக்காய் தூள் உபயோகப்படுத்தி தலை குளிக்கவும்.
No comments:
Post a Comment